Monday 27 May 2019

ஷிர்டி சாய் பாபா

உதியே மருந்து!
ஷீரடி நாதனின் பரம பக்தரான ஒருவரது மனைவி, பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார். பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டார். அதைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்து விட்டனர். அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவரான பக்தர், பாபா, தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்று! என்று சத்தம்போட்டு பிரார்த்தித்தார். பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது உதியைத் தடவினார். கொஞ்சம் உதியை அவரது வாயில் இட்டார். இது நடந்த ஐந்து நிமிடத்தில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டது. அந்தப் பெண் சீராக கவாசிக்கத் தொடங்கினாள். சாயிநாதன் மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்தவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவரது உதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்.
ராமரும் ஸாயியே!
மண்மாடு என்னும் ஊரிலிருந்த ஒருவரைக் காண அவரது நண்பர் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருந்தார். வந்தவர், தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற டாக்டர். அவரை ஷீரடி சென்று பாபாவை தரிசித்து வரலாம் என்று நண்பர் அழைத்தார். வந்திருந்த டாக்டரோ தீவிரமான ராமபக்தர். ஆதலால் நான் ராமனைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் தரிசிப்பதில்லை. என்னால் பாபாவை தரிசிக்க வர இயலாது என்று மறுத்தார்.
அந்த நண்பர் விடவில்லை. எனக்காக தாங்கள் கட்டாயம் வரவேண்டும் நாம் காரிலேயே போகலாம். அங்கு உங்களுக்கு வர விருப்பமில்லை என்றால் காரிலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். நான் மட்டும் உள்ளே சென்று சாயிநாதனை தரிசித்து விட்டு வருகிறேன். வழித்துணையாக மட்டும் என்னுடன் வந்தால் போதும் என்றார். டாக்டரும் ஒப்புக்கொண்டார். ஷீரடியில் பாபா இருந்த மசூதி வாசலில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார் பக்தர். டாக்டர் நண்பர் காரிலேயே இருந்தார். கொஞ்சநேரம் சென்றதும் நண்பர் வருகிறாரா என அறிய, காரில் இருந்தபடியே மசூதியின் உள்ளே பார்த்த டாக்டர், அங்கே சாட்சாத் ராமனே அமர்ந்திருந்ததைக் கண்டார். கண்களை கசக்கி மீண்டும் பார்க்க, அதே காட்சி, உடனே காரிலிருந்து இறங்கி ஓடி, பாபாவின் காலில் விழுந்து ஹே சாய்ராம் என்று கதறி வணங்கினார். எல்லா தெய்வமும் நானே என்று பாபா சொல்வது உண்மையே என்பதை உணர்ந்து வணங்கி ஆசி பெற்றுத் திரும்பினார்.

Friday 24 May 2019

ஷிர்டி சாய் பாபா

ஷிர்டி சாய் பாபா

கலியுகத்தில் கேட்டவர்க்கு கேட்டவரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் ஷீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும். ஷீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும்.
பாபாவின் உருவம் ஓர் அற்புதம்: கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சிதரும் பாபாவின் உருவ அமைப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக அவரது பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது. அவர் தமது வலது காலை, இடது முழங்கால் மீது போட்டு தனது இடது கையினை வலது கால் பாதத்தின் மீது படரவிட்டுள்ளார். பாபாவின் இடது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் நடுவே உள்ள வலது கால் பெருவிரலை இரண்டு மரக்கிளைக்கு நடுவே சூரியனைப் பார்ப்பது போல தரிசித்து பாபாவின் ஒளியைப் பெறலாம்.
மேலும் பாபாவின் பாதங்களை நமது கண்ணீரால் கழுவுவதாக மனதளவில் நினைத்தால் இதயம் தூய்மை அடையும் என்றும், அன்பை சந்தனமாக பூசச் சொல்லியும், நமது நம்பிக்கையை பாபாவின் மேலாடையாகவும் கருதச் சொல்கிறார். நமது சிரசை பாபாவின் பாதத்தில் வைத்து வணங்கிய பின்னர், நமது பக்தியை சாமரமாகக் கொண்டு வீசி, பாபாவின் வெப்பத்தைத் தணிக்க வேண்டும். அதுவே சிறந்த பாபா வழிபாடு.


Wednesday 22 May 2019

முன்வினைகளை நீக்கும் சத்குரு நாதனின் பாதம்... சபட்ணேகருக்கு அருளிய சாய்பாபா!

மனித வாழ்க்கை, முன்வினைப் பயன்களால் ஆனது. அதை உணராது பலர், இந்த வாழ்வில் நிகழும் துயரங்களுக்காக இறைவனை சபிக்கிறார்கள். மெய்யான குருவைக் காணும் வரைக்கும் அவர்களுக்கு இந்த சஞ்சலம் இருக்கிறது. அப்படி ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி இது...

காலத்தை, கி.மு, கி.பி என்று பிரிப்பதுபோல, மனிதனின் வாழ்க்கையையும், சத்குரு ஒருவனுக்கு அறிமுகமாவதற்கு முன், அறிமுகமான பின் என்று பிரிக்கலாம். சத்குருவாம் ஷீரடி சாய்பாபாவினை அறிந்துகொள்வதற்கு முன் அவன் பயணித்த பாதையானது, அவரை அறிந்துகொண்ட பின் முற்றிலும் மாறிவிடுகிறது. அவன் தன் பழைய பொல்லாத பழக்கங்களை விட்டு, சத் சங்கத்தைத் தேடி ஓடுகிறான். குருவின் நாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்கிறான். அதனால், அவனுக்கு உண்டாகும் சகல தீமைகளையும் மாற்றி நன்மைகளாக்கிக் கொள்கிறான்.
சாய்பாபா
சாயி, தன்னை சரணாகதி செய்த கணத்திலிருந்து ஒருவனைக் காக்கிறார். அவன் கூடவேயிருந்து அவனுக்கு அருள்கிறார். அவன் அவரிலிருந்து விலகிச் செல்லும்போது, ஒரு குதிரைக்காரன் தன் குதிரையின் லகானைப் பிடித்துத் தன் பாதைக்குத் திருப்புவது போலத் திருப்புகிறார்.     
மனித வாழ்க்கை, முன்வினைப் பயன்களால் ஆனது. அதை உணராது, பலர் இந்த வாழ்வில் நிகழும் துயரங்களுக்காக இறைவனைச் சபிக்கிறார்கள். மெய்யான குருவைக் காணும் வரைக்கும் அவர்களுக்கு இந்த சஞ்சலம் இருக்கிறது. அப்படி ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி இது.
பாபா
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள அக்கல்கோட்டில் வாழ்ந்த வக்கீல் சபட்ணேகர். செல்வச் செழிப்பில் வாழ்ந்து வந்த சபட்ணேகரின் ஒரே மகன், கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தான். சபட்ணேகருக்கு உலகமே இருண்டுவிட்டது. இனி தன் வாழ்வில் என்ன இருக்கிறது என்கிற விரக்தி மேலிட புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்று தொழுது ஆறுதல் பெற்று வந்தார். ஆனாலும் அவரின் துக்கம் தீர்ந்தபாடில்லை. அப்போதுதான், அவரது கல்லூரிக் காலத்தில் நண்பன் ஒருவன் சாயிநாதரைப் பற்றிச் சொன்னது நினைவு வந்தது. தானும் ஷீரடிபோய் அவரைச் சந்தித்தால் என்ன என்று நினைத்துக்கொண்டு ஷீரடி சென்றார். துவாரகாமாயிக்குச் சென்று பாபாவைப் பணிந்து வணங்கினார். பாபா கோபம் கொண்டு, ``வெளியே போ" என்று சத்தமிட்டார். சபட்ணேகர் வேறுவழியின்றி வெளியே வந்தார்.
சபட்ணேகர், பாபாவின் பக்தரான பாலா ஷிம்பியின் உதவியை நாடினார். பாலா ஷிம்பி சபட்ணேகரை ஆறுதல்படுத்தி மீண்டும் துவாரகாமாயிக்குள் அழைத்துச் சென்றார். பாபாவின் படம் ஒன்றினை எடுத்துக்கொண்டு பாபாவிடம் சென்ற பாலா, அது `யார் படம்' என்று பாபாவிடமே கேட்டார். பக்தர்களோடு விளையாடும் பாபாவிடமே பாலா விளையாடுவதைக் கண்டு, பாபா தானும் அதைத் தொடர்ந்தார். அவர், சபட்ணேகரைக் காட்டி, `இது அவரது காதலனின் படம்' என்று சிரித்தபடியே கூறினார். சபட்ணேகருக்கு அருள பாபா தயாராய் இருக்கிறார் என்று எண்ணிய பாலா, கண்ஜாடை காட்டி பாபா முன்பாக அவரை வரச்செய்தார். ஆனால், சபட்ணேகர் வந்து வணங்கியதும் பாபா மீண்டும், `வெளியே போ' என்று கத்தினார்.
பாபாவின் செய்கையை யார்தான் புரிந்துகொள்ளமுடியும். சபட்ணேகர் வருத்தம் அடைந்தாலும், பாபா தன்னை ஏற்கும் நாள் என்றேனும் ஒருநாள் வரும் என்பதை அறிந்துகொண்டு வெளியேறினார். சஞ்சலத்தோடு ஷீரடி வந்த அவருக்குப் பாபாவின் தரிசனமே பெரும் ஆனந்தத்தைத் தந்திருந்தது. மீண்டும் தன் ஊருக்குக் கிளம்பி வந்து சேர்ந்தார்.
ஷீரடி
மாதங்கள் ஓடின. ஒரு நாள் சபட்ணேகரின் மனைவி அதிகாலையில் ஒரு கனவு கண்டாள். அதில், அவள் ஒரு கிணற்றடிக்குத் தண்ணீர் எடுத்துவரச் செல்கிறாள். அப்போது அங்கே தலையில் துண்டு ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்த பக்கிரி ஒருவர் நின்றார். அவர் அவளை நோக்கி, ``பெண்ணே, உன் பானையைக் கொடு. நான் நீர் நிரப்பித் தருகிறேன்" என்றார். அவளோ அச்சப்பட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்தபோது அவர் அவளைத் தலையில் தொட்டார். அவள் மெய் சிலிர்த்தது. அவள் உறக்க மும் கலைந்தது. மெய்சிலிர்ப்பும், கண்களில் பெருகிய கண்ணீருமாக அவள் தன் கணவரிடம் தன் அனுபவத்தைச் சொன்னாள்.
இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். பொதுவாக பாபா தன் கரங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பதைப் பலர் தம் மனக்கண்ணில் காண்பதுண்டு. ஆனால், ஒரு சிலர் தம் துயரங்களில் மூழ்கியிருக்கையில் பாபா அவர்களைத் தொட்டு அருள் செய்த அனுபவத்தை அடைந்திருக்கிறார்கள். பாபாவை நினைக்கக் கூட முடியாத துயரில் அவர்கள் மூழ்கியிருக்கும் போது, அவரே வந்து அவர்களைத் தொட்டு ஆசீர்வதித்த உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். அப்படித்தான் சபட்ணேகரின் மனைவியும் பாபாவால் தொடப்பட்டார்.

Monday 20 May 2019

சாய் பாபா நம்மிடம் விரும்பிப் பெறும் காணிக்கை எது தெரியுமா?

இனம், மதம், மொழி ஆகிய வேறுபாடுகளைக் கடந்தவர் சாய் பாபா. ஆழ்ந்த நம்பிக்கை, பொறுமை இவை இரண்டை மட்டுமே தன் பக்தர்களிடமிருந்து காணிக்கையாகப் பெறுபவர்.
சாய் பாபா
நேரம், காலம் என்று எதுவும் கிடையாது அவருக்கு. தன் பக்தர்கள் மனதார அவரை நினைத்தாலே போதும், அவர்களைத் தேடி ஓடிவருவார்.
பின்வரும் சம்பவம் அந்தப் பேருண்மையை நமக்கு உணர்த்துகிறது.
ஷீரடிக்கு நானூறு மைல் தொலைவில் வாழ்ந்தவர் திருமதி சாந்தா என்னும் பெண்மணி. இவர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாபாவுக்கு விரதமிருந்து, நைவேத்தியம் செய்து அவரின் திருவுருவப் படத்துக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம்.
ஒருநாள் வியாழக்கிழமை...
அன்று விடுமுறை என்பதால், அவளின் மகன் பாபு வீட்டில் இருந்தான். தன் தாய் பலவிதமான பலகாரங்களைச் செய்வதைக் கண்டு, அவளிடம், ''அம்மா! இன்று நம் வீட்டுக்கு விருந்தினர் யாராவது வரவிருக்கிறார்களா? ஏன் இத்தனை விதமான இனிப்புகளும் பட்சணங்களும் செய்கிறீர்கள்?'' என்று கேட்டான்.
அவனுக்கு பதில் அளிக்கும்விதமாக சாய் பாபாவின் புகைப்படத்தைக் காட்டி, "இவர் ஷீரடியில் வசிக்கிறார். இவருக்கு நைவேத்தியம் செய்வதற்காகவே அதிரசம், பாயசம் முதலியவற்றைச் செய்துவைத்திருக்கிறேன்" என்றாள்.
இதைக் கேட்ட பாபு ஆச்சர்யத்துடன், ``அம்மா! படத்துக்கு முன்னாடி வைத்தால், இவர் எப்படி சாப்பிடுவார்?’’ என்று கேள்வி எழுப்பினான். மேலும், ``ஷீரடி ரொம்பத் தொலைவில் உள்ளது. அங்கிருந்து அவரால் எப்படி வர முடியும்?’’ என்றான்.
தன் பூஜை வேளைகளில் மும்முரமாக இருந்த சாந்தா அவனைச் சமாதானப்படுத்தும்விதமாக, "சரியாகப் பன்னிரண்டு மணிக்கு பாபா நம் வீட்டிற்கு வருவார். நீ பொறுமையாக இரு. நிச்சயம் அவர் வருவார்" என்றாள்.
அப்போது விளக்கில் எண்ணெய் இல்லாததைக் கவனித்தவள், தன் மகனிடம், ''கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போட்டுக்கொள். நான் கடைக்குப் போய் எண்ணெய் வாங்கிக்கொண்டு சீக்கிரம் வந்துவிடுகிறேன்'' என்று கூறிவிட்டுக் கடைக்குச் சென்றாள்.
சாய் பாபா
பாபுவின் கண்கள் வாசலை நோக்கியே இருந்தது. படத்தில் இருக்கும் சாய் பாபாவை நேரில் காண அவன் மனம் விரும்பியது. அவன் மணி பன்னிரண்டு ஆவதற்காகக் காத்திருந்தான்.
அதே நேரம் -
ஷீரடியில் மதிய ஆரத்தி முடிந்து அனைவரும் பாபாவிடம் கற்கண்டு பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.
ஆனால், கற்கண்டை விட மிகவும் சுவையானது அவரின் அருளுரை. கல்கண்டின் இனிமையைப்போலவே அவர் பேசத் தொடங்கினார்.
"உங்களுக்கு எந்த வகையிலும் உறவில்லாத ஒருவர், ஆறறிவு உள்ள மனிதராக இருக்கட்டும், பிராணிகள், விலங்குகள் எது வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களை அன்புடன் நடத்துங்கள். உங்களை நாடி வருவோரை அன்புடன் வரவேற்று, உபசரியுங்கள். அவர்களிடத்தில் வெறுப்பினைக் காட்டாதீர்கள். அவர்கள் வேண்டியதை உங்களால் கொடுக்க இயன்றால் அளியுங்கள். இல்லையேல் அமைதியாயிருங்கள். அதை விடுத்து அவர்கள் மேல் கோபம் கொள்ளாதீர்கள்.
உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். உலகமே தலைகீழாக மாறட்டும். ஆனால், நீங்கள் உங்களுடைய நல்ல குணத்தை மாற்றாதீர்கள். கடவுள் ஒருவரே நமக்கு மேலானவர். அவரின் செயல்கள் அனைத்தும் நம் அறிவுக்கு அப்பாற்பட்டது. நம்முடைய ஆசைகளைப் பூர்த்தி செய்பவர் அவரே. அவரின் அருளாசியினால் மட்டுமே நாம் உயர்ந்த லட்சியங்களை அடைய முடியும்" என்று கூறினார்.
இத்தகைய சிறப்பான அமுதமொழிகளை பாபா கூறி முடித்ததும், பக்தர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
அந்தத் தருணத்தில் பாபுவின் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது. யாரென்று பார்ப்பதற்கு கதவைத் திறந்தான் பாபு. வெளியே வெள்ளை உடையும், தலையில் தலைப்பாகையும் அணிந்து சாயிநாதர் நின்றிருந்தார்!
சாய் பாபா
கடையிலிருந்து தன் தாய் திரும்பி வந்ததும், ''அம்மா, நீ சொன்னதுபோல் பாபா நம் வீட்டுக்கு வந்தார். அதுவும் சரியாக பன்னிரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டினார்.  திறந்து பார்த்தால் பாபா நின்றுகொண்டிருந்தார். 'நீ என்னை நினைத்து அழைத்தால், நான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் வந்துவிடுவேன்' என்று கூறி, ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார்'' என்று கூறினான்.
பாபாவின் லீலைகள் அந்தத் தாய்க்கு நன்றாகத் தெரியும் என்பதால், மகன் கூறியதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனவளாக, பாபாவின் திருவுருவப் படத்துக்கு நமஸ்காரம் செய்தாள்.
தன் பக்தர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும் உண்மையான நம்பிக்கையுடனும், பக்தியுடனும் தன்னை அழைத்தால் ஏதோவொரு ரூபத்தில் சென்று சாயிநாதர் அவர்களுக்கு நிச்சயம் அருள் புரிவார். இந்த நிகழ்ச்சியை விவரிக்கும்
இன்னொரு சம்பவம்...
பாபாவின் மீது பக்தி அதிகம் கொண்ட ஒரு பெண், தினமும் தான் சமைத்த உணவினை பாபாவுக்கு நைவேத்தியமாக வைத்துவிட்டு, அதன் பிறகே அனைவருக்கும் பரிமாறுவது வழக்கம்.
ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தால், பாபாவிற்கு அன்றாடம் செய்யும் நைவேத்தியத்தைச் செய்ய இயலவில்லை. அதைப் பற்றி அவள் யோசித்து மனம் வருந்திக்கொண்டிருக்கும்போது, அவள் வீட்டின் வாசலில் ஒரு நாய் நிற்பதைக் கண்டாள். அதற்கு அளிப்பதற்காக திண்பண்டம் எடுக்க வீட்டிற்குள் விரைந்தாள்.
ஆனால், அவள் திரும்பி வருவதற்குள் அந்த நாய் சிறிது தொலைவு சென்றுவிட்டது. அந்தப் பெண் ஏமாற்றத்துடன் பின்வருமாறு வேண்டலானாள், 'சாயிநாதா! தாங்கள்தான் அந்த நாயின் வடிவில் என்னிடம் உணவு பெற வந்தீர்கள் என்று எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். நான் நினைத்தது உண்மையானால் அந்த நாய் இங்கு வந்து நான் கொடுக்கும் திண்பண்டத்தை உண்ண வேண்டும்' என்று வேண்டினாள்.

Tuesday 14 May 2019

சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம்

சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய பலன்களை பாபா தருவார்.
சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம்
சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய பலன்களை பாபா தருவார்.

தரிசன வழிபாட்டுக்கே இத்தகைய மகத்துவம் இருக்கும் போது, ஏழேழு உலகங்களையும் ஆட்சி செய்யும் பாபாவிடம் நேரில் பேசி, பழகி, பணிவிடைகள் செய்து, அருள் பெற்றவர்கள் எந்த அளவுக்கு பாக்கியம் செய்தவர்களாக இருந்திருப்பார்கள்? துவாரகமாயி மசூதியில் இருந்து பாபா, இந்த உலகை ஆட்சி செய்த போது, ஏழைகள் பணக்காரர்கள் வித்தியாசமின்றி பலரும் பாபாவிடம் சரண் அடைந்து தங்களை ஒப்படைத்திருந்தனர். பாபாவிடம் உண்மையான பக்தியுடன் இருந்தனர்.
அவர்களில் லட்சுமிபாயும் ஒருவர். இவர் நல்ல வசதி படைத்தவர். பாபாவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவர் இரவில் மசூதியில் தூங்குவதற்கு பாபா அனுமதி அளித்திருந்தார். மசூதியில் பாபாவுக்கு தேவையானவைகளை செய்து கொடுக்கும் சேவையை லட்சுமிபாய் செய்து வந்தார். ஒரு தடவை லட்சுமிபாய் சமைத்து எடுத்து வந்திருந்த உணவை, ஒரு நாய்க்கு எடுத்து பாபா போட்டார்.

அதைக் கண்டு வேதனை அடைந்த லட்சுமிபாய், ‘‘என்ன பாபா இப்படி செய்து விட்டீர்கள்?’’ என்றார். அதற்கு பாபா, ‘‘என் பசியைப் போன்றதுதான் நாயின் பசியும். எந்த ஒரு உயிரினத்தின் பசியைத் தீர்த்து வைத்தாலும், அது என் பசியைத் தீர்த்து வைத்த மாதிரியாகும். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

பாபா மகாசமாதி அடைவதற்கு சில தினங்களுக்கு முன்பு லட்சுமி பாயை அழைத்தார். தன் கப்னி உடைக்குள் கையை விட்டு 2 தடவை நாணயங்களை எடுத்துக் கொடுத்தார். ஒரு தடவை ஐந்து நாணயங்கள் வந்தது. அடுத்த முறை 4 நாணயங்கள் வந்தது. அந்த 9 நாணயங்களையும் அவர் லட்சுமிபாயிடம் கொடுத்தார்.

பாபாவின் இந்த செய்கை ஒன்பதின் மகத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது. இதனால் அந்த 9 நாணயங்களையும் அவர் பொக்கி‌ஷமாகக் கருதினார். சீரடியில் உள்ள லட்சுமிபாயின் வீட்டில் அந்த 9 நாணயங்களை அவரது வாரிசுகள் பாதுகாத்து வருகிறார்கள். சீரடி செல்லும் பக்தர்களில் பலரும் லட்சுமிபாய் வீட்டுக்கு சென்று அந்த நாணயங்களை பார்த்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

லட்சுமிபாய் போல இன்னொரு பக்தரான ஷாமாவுக்கும் ஒரு தடவை சாய்பாபா, மிகவும் அபூர்வமான செப்பு நாணயம் ஒன்றை பரிசாகக் கொடுத்தார். அது சாதாரண நாணயமல்ல. நாணயத்தின் ஒரு பக்கம் ராமர், சீதை, லட்சுமணர் உருவங்கள் உள்ளது. மற்றொரு பக்கத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டிருப்பது போன்ற உருவம் உள்ளது.



தான் உடுத்திருந்த கப்னி உடை மட்டுமே தனக்குரியதாகக் கொண்டு வாழ்ந்த பாபா, தினமும் தனக்கு கிடைக்கும் நாணயங்கள், பொருட்களை அன்றே பக்தர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவார். ஆனால் அந்த அபூர்வ செப்பு நாணயத்தை மட்டும் அவர் யாருக்கும் கொடுக்காமல் நீண்ட நாட்களாக தம்முடனே வைத்திருந்தார்.

அதை பெறும் பாக்கியம் ஷாமாவுக்கு கிடைத்தது. அவரது உண்மையான பெயர் மாதவராவ் தேஷ்பாண்டே. சீரடியில் பாபா வாழ்ந்த மசூதிக்கு எதிரில் உள்ள பள்ளியில் அவர் ஆசிரியராக இருந்தார். முதலில் சாய்பாபா மீது அவருக்கு எந்தவித ஈர்ப்பும் ஏற்படவில்லை. நள்ளிரவில் பாபா பல மொழிகளில் பேசுவதை கேட்ட பிறகு அவர் மீது ஷாமாவுக்கு மரியாதை ஏற்பட்டது.

ஒரு தடவை வி‌ஷப்பாம்பு ஒன்று ஷாமாவை கடித்து விட்டது. அந்த வி‌ஷத்தை இறக்கி ஷாமாவை பாபா காப்பாற்றினார். அதன் பிறகு பாபாவே கதி என்று ஷாமா மாறினார். ஷாமாவின் பிரதிபலன் பாராத குணத்தை அறிந்த பாபா அவரை விஷ்ணு சகஸ்ரநாமத்தை நன்றாக கற்க செய்து, அதன் பொருளை விளக்க வைக்கக் கூடிய ஆற்றலை பெறச் செய்தார். இதனால் பாபாவுக்கும் ஷாமாவுக்கும் இடையிலான ஆத்மார்த்தமான நட்பு பலம் பெற்றது.

இதனால்தான் சாய்சத் சரிதத்தை எழுத தபோல்கர் எனும் ஹேமந்த் பந்த் ஆசைப்பட்ட போது, அதற்கான அனுமதியை ஷாமாவால் மிக எளிதாக பெற்றுக் கொடுக்க முடிந்தது. ஆனால் தனக்காக பாபாவிடம் இருந்து ஷாமாவால் எதுவும் பெற இயலவில்லை. ஒருநாள் பாபாவிடம் அவர் இது பற்றி நேரடியாக கேட்டு விட்டார். ‘‘பாபா, உங்களைத் தேடி வரும் எல்லோருக்கும் பணம், பொருள் எல்லாம் கொடுக்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும் நீங்கள் எதுவுமே தருவதில்லையே... ஏன்?’’ என்று கேட்டார்.

அதற்கு பாபா, ‘‘அவையெல்லாம் உனக்கு தேவை இல்லை. உனக்கு ஒரு அபூர்வ பொருள் காத்திருக்கிறது. அதுவரை நான் சொல்லும் கடமைகளை செய்து வா’’ என்றார். அதோடு ஷாமாவுக்கு நிறைய புத்தகங்களை வரவழைத்து படிக்கக் கொடுத்தார். அதில் உள்ள நல்ல கருத்துகளை மக்களிடம் எடுத்துக் கூறும்படி உத்தரவிட்டார்.

ஷாமாவின் சிறப்பை அறிந்து சில பக்தர்கள் அவருக்கு பணம் கொடுக்க முயன்றதுண்டு. ஆனால் அதை பாபா தடுத்து விட்டார். இதற்காக ஷாமா ஒருபோதும் வருத்தப்பட வில்லை. ஒவ்வொரு பிறவியிலும் பாபாவுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்ததை உணர்ந்தார். எனவே பொறுமை காத்தார்.

Monday 13 May 2019

சீரடி சாய்பாபா பல்லக்கு ஊர்வலத்தின் சுவராசிய வரலாறு!

சீரடி உட்பட அனைத்து சாய்பாபா ஆலயங்களிலும் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த புகழ்பெற்ற நிகழ்விற்கு ஒரு சுவாரசியமான பின்னணி உண்டு. பாபா வாழ்ந்த துவாரகாமாயியில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் சாவடி என்ற இடம் இருக்கிறது.

sai
சீரடி உட்பட அனைத்து சாய்பாபா ஆலயங்களிலும் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த புகழ்பெற்ற நிகழ்விற்கு ஒரு சுவாரசியமான பின்னணி உண்டு. பாபா வாழ்ந்த துவாரகாமாயியில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் சாவடி என்ற இடம் இருக்கிறது.

சாவடி என்றால் பொது மக்கள் சந்தித்து கூடி பேசும் இடமாகும். அதாவது ஊர் சங்க கூட்டங்கள் அங்குதான் நடைபெறும். மேலும் வழிப்போக்கர்களும் இந்த சாவடியின் தங்கிச் சென்றனர். இந்த சாவடி இரண்டு அறைகளுடன் ஒரு வராண்டா மாதிரியான சிறு அறை அமைப்பைக் கொண்டது.

துவாரகாமாயி மசூதி பழுதடைந்த காரணத்தாலும், மண் கட்டிடம் என்பதால் மழை நேரத்தில் தண்ணீர் ஒழுகிய காரணத்தாலும், அங்கு தங்க முடியாத நிலை இருந்தது. சில சமயம் பலத்த மழை பெய்யும் போது மசூதி உள்ளே தண்ணீர் தேங்கி விடும். இதனால் பாபாவை அவரது பக்தர்கள் சாவடியில் வந்து தங்குமாறு கூறினார்கள். ஆனால் துவாரகாமாயில் இருந்து வெளியேற பாபாவுக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் பாபா பக்தர்கள் விடவில்லை.

பாபாவை வற்புறுத்தி சாவடிக்கு அழைத்து சென்று விட்டனர். இதையடுத்து பாபா சாவடியில் இரவில் தங்கி ஓய்வு எடுக்கத் தொடங்கினார். ஒருநாள் சாவடியிலும், மறுநாள் துவாரகாமாயியிலும் தூங்கும் பழக்கத்தை பாபா ஏற்படுத்தினார். ஒரு அறையில் பாபாவும் மற்றொரு அறையில் பக்தர்களும் படுத்துத் தூங்கினார்கள். இதன் காரணமாக துவாரகாமாயிக்கு கிடைத்த அதே மகிமை, மதிப்பு, மரியாதை எல்லாம் சாவடிக்கும் கிடைத்தது.
லேட்டஸ்ட் கருத்துகள்
ஓம் சாய் ராம்
Soraiyur Rangarajan


பாபா தெய்வமான பிறகு, சீரடியில் அவர் பாதம் பட்ட இடங்கள் எல்லாம், எப்படி புண்ணிய பூமியாக மாறியதோ, அது போல சாவடியும் புனிதப் பகுதியாக மாறியது. பாபா உயிருடன் இருக்கும் போது, துவாரகாமாயியில் இருந்து சாவடிக்கு அவரை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக மேள, தாளம் முழங்க அழைத்து செல்வார்கள். சில சமயம் பாபாவை வாணவேடிக்கை, பஜனை பாடல்கள் பாடியபடி அழைத்து செல்வார்கள். பாபாவின் வருகையை எதிர்பார்த்து சாவடி அலங்கரிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அங்குள்ள ஆசனத்தில் பாபா அமர்ந்ததும் அவருக்கு பக்தர்கள் கிரீடம் அணிவித்து பூ மாலைகளை சூடுவார்கள்.

அனைத்து ஆட்டம், பாட்டம் முடிந்து, பக்தர்கள் புறப்பட்டு சென்றதும், பாபா தாமே படுக்கையை சரி செய்து தூங்கச் சென்று விடுவார். 1918-ம் ஆண்டு பாபா மகாசமாதி அடையும் வரை இந்த பழக்கம் தொடர்ந்து நடந்தது. பாபா தெய்வமான பிறகும், இந்த பழக்கம் நின்று விடவில்லை.

நாளடைவில் வியாழன் தோறும் இந்த பழக்கம் நடைமுறைக்கு வந்தது. இப்போதும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து பல்லக்குகள் கொண்டு வரப்பட்டு பல்லக்கு யாத்திரை நடத்தப்படுகிறது.

Saturday 11 May 2019

சீரடி சாயி பாபா பிறப்பு


மராட்டிய மாநிலம் பாத்ரி கிராமத்தில் கங்கா பாவத்யா - தேவகிரியம்மா என்ற தம்பதி வசித்து வந்தனர். தீவிர சிவ பக்தர்களான அவர்களுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லை. ஒரு நாள் இரவு பலத்த மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. படகோட்டியான கங்கா பாவத்யா, தன் படகை பத்திரப்படுத்த ஆற்றங்கரைக்கு சென்று விட்டார். வீட்டில் தேவகிரியம்மா மட்டும் இருந்தார்.
அப்போது, வயதான ஒருவர் வந்து கதவை தட்டினார். தேவகிரியம்மா கதவைத் திறந்து “என்ன வேண்டும்” என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், “மழை அதிகம் பெய்வதால் இன்றிரவு மட்டும் இங்கு தங்கிக் கொள்கிறேன்” என்றார். “சரி” என்று கூறிய தேவகிரியம்மா திண்ணையில் அவரை படுத்துக் கொள்ள அனுமதித்தார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவைத்தட்டி தேவகிரியம்மாவை எழுப்பிய அந்த முதியவர், “பசிக்கிறது, சாப்பிட ஏதாவது தாருங்கள்” என்றார். உடனே அவருக்கு தேவகிரியம்மா சாப்பாடு கொடுத்தார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டிய அந்த முதியவர், “எனக்கு கால்கள் வலிக்கிறது. சற்று பிடித்து விடு” என்றார். இதைக் கேட்டதும் தேவகிரியம்மா அதிர்ச்சி அடைந்தார். பணம் வாங்கிக் கொண்டு யாராவது அவருக்கு கால் பிடித்து விட வருவார்களா என்று தேடிப்பார்த்தார். யாரும் கிடைக்கவில்லை, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் தேவகிரியம்மா தவித்துக் கொண்டிருந்த போது, மீண்டும் கதவுத் தட்டப்பட்டது. இந்த முறை ஒரு பெண் வெளியில் நின்று கொண்டிருந்தார். அவள், “இந்த முதியவருக்கு நான் பணிவிடை செய்யட்டுமா” என்று கூறினார். மகிழ்ச்சி அடைந்த தேவகிரியம்மா, “சரி செய்யுங்கள்” என்று கூறி பணம் கொடுத்து விட்டு, வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார்.
வெளியில் இருந்த முதியவரும், பெண்ணும் உண்மையில் பரமசிவனும், பார்வதியும் ஆவார்கள். அவர்கள் இருவரும் தேவகிரியம்மாவின் குறையை தீர்க்க முடிவு செய்தனர். அவர்கள் மீண்டும் கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்த தேவகிரியம்மாவுக்கு தன் கண்ணையே நம்பமுடியவில்லை. வெளியில் பரமசிவனும், பார்வதியும் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தனர், மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற தேவகிரியம்மா இறைவன், இறைவி முன்பு விழுந்து வணங்கினார்.
அவரை ஆசீர்வதித்த இறைவன், “உனக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும், மூன்றாவது குழந்தையாக நானே உன் வயிற்றில் பிறப்பேன்” என்று ஆசி கூறி மறைந்தனர். தேவகிரியம்மாவுக்கு நடப்பது கனவு போல இருந்தது. கங்கா பாவத்யா வீடு திரும்பியதும் நடந்ததை கூறினார். ஆனால் கங்கா பாவத்யா அதை நம்பவில்லை. சில தினங்களில் தேவகிரியம்மா கர்ப்பமடைந்தார், முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஓராண்டு கழித்து பெண் குழந்தை ஒன்றை தேவகிரியம்மா பெற்றெடுத்தார். மூன்றாவது முறை தேவகிரியம்மா கர்ப்பம் தரித்த போது கங்கா பாவத்யாவுக்கு ஈசன் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
தேவகிரியம்மாவுக்கு காட்சி கொடுத்த ஈசன் தனக்கும் காட்சி தர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். தேவகிரியம்மா அவரைப்பின் தொடர்ந்தார். தம்பதியர் இருவரும் காடு - மேடுகளில் அலைந்து திரிந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேவகிரியம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் அதை கண்டு கொள்ளாமல் கங்கா பாவத்யா சென்று கொண்டிருந்தார். இதனால் தேவகிரியம்மா அந்த குழந்தையை அரசமர இலைகளில் சுற்றி காட்டுக்குள்ளேயே போட்டு விட்டு கணவரை பின் தொடர்ந்து சென்று விட்டார்.
முஸ்லிம் பக்கீர் ஒருவர் அந்த குழந்தையை கண்டெடுத்து மன்வாத் கிராமத்தில் உள்ள தன் வீட்டுக்கு கொண்டு சென்றார். அவர் பாலபாபாவை 4 ஆண்டுகள் வளர்த்தார். பிறகு அவர் அந்த சிறுவனை வேங்குசாவிடம் ஒப்படைத்தார்.

Friday 10 May 2019

ஒரு மகானாக சீரடி சாயி பாபா





அவருக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’ என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவத் துவங்கியது.

Wednesday 8 May 2019

பாபாவின் உத்தரவே தாரகமந்திரம்!


 ஷீரடிக்கு யார் வர வேண்டும் என்றாலும், இல்லை யார் ஷீரடியிலிருந்து கிளம்ப வேண்டும் என்றாலும் சரி பாபாவின் அனுமதி இருந்தாலே அது நிகழும். அவ்வாறு இமாம்பாய் என்ற ஒரு பாபாவின் அடியவர், தன் ஊருக்குக் கிளம்புவதற்கு ஆயத்தமாகி பாபாவிடம் விடை பெறச் சென்றார். ஆனால், பாபா அவரை அப்போது ஊருக்குப் போக வேண்டாம் என்றும், நிலைமை சரியில்லை என்றும் கூறினார். இமாம்பாய் தன் வீட்டிற்கு போகும் அவசரத்திலும் ஆர்வத்திலும் பாபாவின் வார்த்தையை மீறிப் புறப்பட்டார். மேலும் அவர் கால்நடையாக செல்லலாம் என்றும் தீர்மானித்தார்.
ஷீரடியில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவு வரை எந்தவோர் இடைஞ்சலுமின்றி அவர் கடந்தார். சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அவர் சுராலா என்ற நதிக்கரையில் நடந்து சென்றார். அப்போது வானிலை மோசமாக இருந்தபடியால் அங்கிருந்த ஓர் அதிகாரி அவரை மேலும் பயணத்தைத் தொடர வேண்டாம் என்று எச்சரித்தார். இன்னும் நான்கு மைல் மட்டுமே எஞ்சியிருப்பதால், அவர்தான் செல்வதாகக் கூறிச் சென்றார். அவர் மூன்று மைல் தொலைவு சென்றதும், பலத்த காற்று வீசத் தொடங்கியது. இடியுடன் பெரும்மழை பெய்தது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கலக்கமுற்ற இமாம்பாய் சாயிநாதரை அழைத்தார். அப்போது வானில் ஒரு மின்னல் கீற்று வந்தது. அந்த ஒளியில் சாயிநாதரை தரிசித்தவர், சாயியைப் பணிந்து வணங்கியபடிஅந்த நதியைக் கடந்து சென்றார். அவர் நதியைக் கடக்கும் வரையில் தண்ணீர் அவரின் முழங்கால் அளவே இருந்தது. மறு கரைக்குச் சென்றதும் அவர் திரும்பி ஆற்றினை நோக்கும்போது அதில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக் கண்டார். பாபாவின் அருளால்தான்  தன்னால் ஆற்றினைக்  கடக்க முடிந்தது என்பதை அறிந்து அங்கேயே பாபாவுக்கு மனதார நன்றி கூறினார்.
பாபா

சாயிநாதர் அன்னைக்கு நிகரானவர் ஆவார். ஒரு தாய் எவ்வாறு தன் குழந்தைக்கு ஆபத்து என்று தெரிந்த கணத்தில் ஒடிச்சென்று காக்கின்றாளோ, அவ்வாறே சாய்நாதர் தன் பக்தர்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் ஓடிச்சென்று அவர்களைக் காப்பார்.

Tuesday 7 May 2019

மன அமைதி அருளும் மகான்!

ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் என்பதை பின்வரும் கதை நமக்கு உணர்த்துகிறது.
வாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த காகாஜி வைத்தியர் என்பவர் சப்தசிருங்கி தேவியின் ஆலயத்தில் பூசாரியாக இருந்தார். அவர் தினமும் தேவிக்கு பூஜை செய்து வந்த போதிலும் அவரது மனமானது வேதனைகளால் நிறைந்து அமைதியிழந்து இருந்தது. மனஅமைதி பெற விரும்பிய அவர், தான் தினமும் வழிபடும் சப்தசிருங்கியிடம் வழி கேட்டார். அவர் மேல் இரக்கம் கொண்ட தேவி அவரை பாபாவைச் சென்று வணங்கும்படியும் அதனால் மனமானது அமைதியடையும் என்றும் கூறினாள்.
சாயிநாதரைப் பற்றி எதுவும் அறிந்திராத காகாஜி, பாபா என்று சப்தசிருங்கி தேவி குறிப்பிட்டது த்ரயம்பகேஷ்வரில் உள்ள ஈஸ்வரனையே ஆகும் என்று தன்னுள் எண்ணியவர், த்ரயம்பகேஷ்வர் சென்றார். அங்கு பத்து நாள்கள் தங்கி ஈஸ்வரரை வழிபட்ட பின்னும் அவர் மனமானது அமைதி பெறவில்லை. எனவே, மீண்டும் அவர் தன் கிராமத்திற்குத் திரும்பினார்.
மீண்டும் தேவியை வணங்கிய அவர் தன் மீது கருணை கொண்டு தனக்கு மன அமைதி கிட்ட வழி கூற வேண்டும் என்று வணங்கினார். அவர்மீது இரக்கம் கொண்ட தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றினாள். தான் பாபா என்று குறிப்பிட்டது ஷீரடி சமர்த்த சாயியையே என்றும்; வீணாக ஏன் த்ரயம்பகேஷ்வர் சென்றாய்? என்றும் வினவினாள். அவ்வாறு கூறிவிட்டு உடனே மறைந்துவிட்டாள். உறக்கத்திலிருந்து விழித்த காகாஜி தனக்கு ஷீரடியைப் பற்றி எதுவும் தெரியாததால், தான் எவ்வாறு ஷீரடியை அடைந்து பாபாவை தரிசிப்பது என்று எண்ணியிருந்தார்.
நாம் கடவுளைக் காண வேண்டும் என்று நினைத்தால் மட்டும் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைத்துவிடாது. கடவுளின் பூரண அனுக்கிரகம் நமக்கு இருந்தால் மட்டுமே அவரைக் காண இயலும். ஆனால், பாபாவின் விசயத்தில் அவரின் பக்தர்கள் அவரைக் காண எண்ணினாலே போதும் எப்படியேனும் அவர்களைத் தன்னிடம் கூட்டி வருவார்.
அவ்வாறே காகாஜிக்கும் நிகழ்ந்தது. ஷீரடியைச் சேர்ந்தவரும், சாயிபாபாவின் பெரும் அடியவருமான ஷாமா என்பவரின் சகோதரர் ஒருமுறை ஒரு ஜோதிடரைச் சந்தித்தார். அவரிடம் தன் குடும்பத்தில் பல சோதனைகள் ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் போக்க ஏதேனும் வழி கூறுமாறும் கேட்டார். அதற்கு அந்த ஜோதிடர், "உங்கள் தாயார், உங்கள் சகோதரர் ஷாமா சிறு பிள்ளையாக இருக்கும்போது உடல்நிலை சரியில்லாமல்போன காரணத்தால், உங்கள் குலதெய்வமான சப்தசிருங்கியிடம், ஷாமாவின் உடல்நலம் சரியானால் குடும்பத்துடன் வந்து வழிபடுவதாகவும் கூறினார். அவர் அவ்வாறு வேண்டிய உடனே ஷாமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அவர் குலதெய்வத்திடம் வேண்டியதை மறந்துவிட்டார். ஆனால், ஷாமாவின் தாயாருக்கு இறக்கும் தருவாயில் தனது வேண்டுதல் நினைவுக்கு வந்தது. ஷாமாவிடம் குலதெய்வத்தைச் சென்று வணங்க வேண்டும் என்ற சத்தியத்தைப் பெற்ற பின்னரே ஷாமாவுடைய தாயாரின் உயிர் பிரிந்தது.
பாபா கோயில்
ஆனால், நாளடைவில் ஷாமா அந்த சத்தியத்தை மறந்தார். இதை நினைவுகூர்ந்த ஜோதிடர் அந்த சத்தியத்தை நிறைவேற்றினால் அவரின் குடும்பக் கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்று கூறினார். பாபாவின் ரூபத்திலேயே தனது குலதெய்வமான சப்தசிருங்கி தேவியை தரிசித்த ஷாமா நேராக பாபாவிடம் சென்றார்.
பாபாவை தன் குலதெய்வம் என்று எண்ணி வழிபடச் சென்ற அவரிடம், வாணி என்ற கிராமத்தில் இருக்கும் ஷாமாவின் குலதெய்வமாக விளங்கும் சப்தசிருங்கியை சென்று வழிபடுமாறு கூறினார். அதாவது அந்தச் செயலின் மூலம் பாபா தன் பக்தரான காகாஜியைத் தன்னிடம் அழைத்து வரவும் எண்ணினார்.
ஷாமா வாணி கிராமத்திற்கு வந்து தன் குலதெய்வமான சப்தசிருங்கியை வணங்கினார். அவர் ஷீரடியிலி ருந்து வந்திருக்கிறார் என்பதை அறிந்த காகாஜிக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அவர் தனக்கு பாபாவை தரிசிக்க வேண்டும் என்றும், தன்னையும் அவருடன் அழைத்துச் செல்லுமாறும் கேட்டார். ஷாமாவும் அவரைத் தன்னுடன் ஷீரடிக்கு அழைத்துச் சென்றார்.
காகாஜி பாபாவை தரிசித்த அந்த கணமே அவரது மனமானது அமைதியைப் பெற்றது. ஆச்சர்யத்தின் உச்சமாக காகாஜி பாபாவிடம் தன்னுடைய பிரச்னைகள் பற்றி எதுவும் கூறவில்லை. அதேபோல் பாபாவும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவரைக் கண்ட  மாத்திரத்திலேயே அவரின் மனதில் இருந்த வேதனைகள் நீங்கி, அவரது மனமானது அமைதியடைந்தது.

Monday 6 May 2019

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஷீரடி சாய்பாபா

லியுகத்தின் கண்கண்ட தெய்வமாக எங்கெங்கும் வியாபித்திருந்து, அருள்மழை பொழிந்து வருகின்றார். அவர் எங்கு எப்போது பிறந்தார் என்பது யாருக்குமே தெரியாது. அவருடைய தோற்றம்தான் புதிராக இருந்தது என்றால், அவருடைய மொழிகளும், நடவடிக்கைகளும்கூட பல நேரங்களில் புதிராகவே இருந்திருப்பதை அவருடைய சத்சரிதத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அவர்தாம் மகாசமாதி அடையப்போகும் நாளைகூட இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே 1916-ம் ஆண்டு மற்றவர்களுக்கு உணர்த்தவே செய்தார். ஆனால், மற்றவர்கள் அதை உணரவில்லை. 1918-ம் ஆண்டு இதே விஜயதசமி நாளில்தான் சாய்பாபா மகா சமாதி அடைந்தார். அவர் மகா சமாதி அடைந்த 100-வது ஆண்டு இன்று விஜயதசமியன்று தொடங்குகிறது.
சாய்பாபா
தம்முடைய மகா சமாதிக்குப் பிறகும், தாம் அளவற்ற ஆற்றலுடன் தம் பக்தர்களுக்கு அருள்புரிவேன் என்று தாம் கொடுத்த உறுதிமொழியின்படி இன்றும் தம்மைச் சரணடைந்தவர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். அவர் தம்முடைய ஜீவித காலத்தில் நடத்திய சில அருளாடல்களை இங்கே பார்ப்போம்.
தண்ணீரில் விளக்கேற்றிய தயாபரன்!
ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் மசூதியில் தீபம் ஏற்றுவது பாபாவின் வழக்கம். அதற்காக தினமும் கடைத்தெருவிற்குச்  சென்று வியாபாரிகளிடம் எண்ணெய் வாங்கி தீபம் ஏற்றுவார். சிலநாள்கள் இப்படியே சென்றன. ஒருநாள் கடைக்காரர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு முடிவு செய்தனர். அதன்படி இனி யாரும் பாபாவுக்கு எண்ணெய் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்தனர். பாபாவுக்குக் கொடுக்கும் எண்ணெய்க்குக் காசு வராது என்பதால்தான் அந்த முடிவுக்கு வந்தனர்.
இதை அறிந்த மகான் அவர்களுக்கு ஞானம் வழங்க விரும்பினார். எனவே, அவர் அந்த எண்ணெய் வியாபாரிகளிடம் சென்று எண்ணெய் கேட்டார். ஆனால், அவர்கள் யாரும் எண்ணெய் தர முன்வரவில்லை.
சாய்பாபா
அனைத்தும் அறிந்த சாயிநாதர் எதுவும் பேசாமல் தன் மசூதிக்குச் சென்றார். அவர் என்ன செய்கிறார் என்பதைக் காண எண்ணெய் வியாபாரிகள் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். பாபா எண்ணெய் டப்பாவை கையில் எடுத்து, அதில் சிறிது நீர் ஊற்றினார். அதைத் தன் வாயில் ஊற்றி பின்னர் அந்த நீரை மறுபடியும் எண்ணெய் டப்பாவில் நிரப்பி, அதைத் தீபங்களில் ஊற்றினார். அவரைச் சாதாரண மானிடர் என்று அதுவரை எண்ணியிருந்த வியாபாரிகள் அதிசயிக்கும் வகையில் தீபங்கள் எரியத் தொடங்கின.
இதைக் கண்ட வியாபாரிகள் அவரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினர். இவ்வாறு பாபா அவருக்கு ஞானம் வழங்கி ஆசி கூறினார். மேலும் என்றும், எவரிடத்தும் பொய் கூறக் கூடாது என்றும், எப்போதும் பொருளாசை இருக்கக் கூடாது என்றும் கூறினார்.

Sunday 5 May 2019

சீரடி சாயி பாபா




Shirdi-Sai-Baba
சீரடி சாயி பாபா, 20 ஆம்  நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய குரு ஆவார். இதுவரை இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த துறவிகளில் இவரும் ஒருவர்.   இவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனித துறவியாகவும் போற்றுகின்றனர். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்திக்காட்டினார். நோயுள்ளவர்களை குணப்படுத்தினார். இதனால், இந்துக்கள் இவரை ‘கடவுளின் அவதாரம்’ என்று கருதி, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இஸ்லாமியர்கள் இவரை, ‘பிர் அல்லது குதுப்’ ஆக நம்புகின்றனர். உலகமெங்கும் இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்து மறைந்த ஸ்தலத்தை வணங்கி தரிசிக்க, அவர் பிறந்த இடமான சீரிடிக்கு வருகைப் புரிந்த வண்ணம் உள்ளனர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் துறவியாகவே வாழ்ந்து மறைந்த புனித சீரடி சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: செப்டம்பர் 28, 1838
இடம்: சீரடி, அகமது நகர் மாவட்டம், மகாராஸ்டிரா மாநிலம், இந்தியா
பணி: இந்திய குரு
இறப்பு: செப்டம்பர் 20, 1928
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு பற்றிய தகவல்
சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு மகானாக சீரடி சாயி பாபா
அவருக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’ என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவத் துவங்கியது.
இறப்பு
இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்ட சீரடி சாய் பாபா அவர்கள், 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். இன்று அவர் இல்லாவிட்டாலும், சீரடியில் அவர் சமாதியான இடம் தற்பொழுது பல்லாயிரக்கணக்கானவர் புனிதமாக வணங்கும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

Saturday 4 May 2019

சீரடி சாய்பாபாவின் உதி

சீரடி சாய்பாபாவின் உதி

துவாரகாமாயீயில் சாய்பாபாவால் ஏற்றி வைத்த அக்னி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அதில் விறகுக்கட்டை போட்டு எரித்து கொண்டிருந்தார். அதன்முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம். தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து உதி என்று அழைக்கப்படும்.

    விபூதியை எடுத்து தருவார். அக்னி குண்டத்தை எடுக்கும்போது வேண்டுமானால் அது சாம்பலாக இருக்கலாம். பகவான் சாயியின் ஸ்பரிசம் பெற்ற பிறகு இந்த உதி மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது. எல்லாவித ஊழ்வினைகளையும், வியாதிகளையும் போக்கவல்லது. தினமும் குளித்தபின் உதியை நெற்றியில் இட்டு கொண்டும், கொஞ்சம் நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் நோய் நிவாரணம் தரும்.

பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நம்பிக்கையும், பொறுமையும் ஆகும். அவர் மேல் நம்பிக்கை வைத்து நம் வேண்டுதலை சொன்னால், பாபா அதை நிறைவேற்றி வைப்பார்.

Friday 3 May 2019

ஷீரடி ஸாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி! 108 போற்றி

ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:
ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:
ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
ஓம் சேஷ சாயினே நம:
ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
ஓம் பூதாவாஸாய நம:
ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
ஓம் காலாதீதாய நம:
ஓம் காலாய நம:
ஓம் காலகாலாய நம:
ஓம் காலதர்பதமனாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் அமர்த்யாய நம:
ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
ஓம் ஜீவாதாராய நம:
ஓம் ஸர்வாதாராய நம:
ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:
ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
ஓம் ஆரோக்ய÷க்ஷமதாய நம:
ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
ஓம் ருத்திஸித்திதாய நம:
ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
ஓம் யோக÷க்ஷமவஹாய நம:
ஓம் ஆபத்பாந்தவாய நம:
ஓம் மார்க்பந்தவே நம:
ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:
ஓம் ப்ரியாய நம:
ஓம் ப்ரீதிவர்தனாய நம:
ஓம் அந்தர்யாமினே நம:
ஓம் ஸச்சிதாத்மனே நம:
ஓம் ஆனந்தாய நம:
ஓம் ஆனந்ததாய நம:
ஓம் பரமேச்வராய நம:
ஓம் பரப்ரம்ஹணே நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் ஞானஸ்வரூபிணே நம:
ஓம் ஜகத பித்ரே நம:
ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
ஓம் பக்தாபயப்ரதாய நம:
ஓம் பக்த பாராதீனாய நம:
ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
ஓம் சரணாகதவத்ஸலாய நம:
ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
ஓம் ஞான வைராக்யதாய நம:
ஓம் ப்ரேமப்ரதாய நம:
ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:
ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:
ஓம் கர்மத்வம்சினே நம:
ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
ஓம் குணாதீத குணாத்மனே நம:
ஓம் அனந்த கல்யாண குணாய நம:
ஓம் அமித பராக்ரமாய நம:
ஓம் ஜயினே நம:
ஓம் துர்தர்ஷா÷க்ஷõப்யாய நம:
ஓம் அபராஜிதாய நம:
ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:
ஓம் அசக்யராஹிதாய நம:
ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
ஓம் ஸுருபஸுந்தராய நம:
ஓம் ஸுலோசனாய நம:
ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
ஓம் அரூபாவ்யக்தாய நம:
ஓம் அசிந்த்யாய நம:
ஓம் ஸூக்ஷ்மாய நம:
ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
ஓம் மனோவாக தீதாய நம:
ஓம் ப்ரேமமூர்த்தயே நம:
ஓம் ஸுலபதுர்லபாய நம:
ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
ஓம் ஸர்வ பாரப்ருதே நம:
ஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:
ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
ஓம் தீர்த்தாய நம:
ஓம் வாஸுதேவாய நம:
ஓம் ஸதாம் கதயே நம:
ஓம் ஸத்பராயணாய நம:
ஓம் லோகநாதாய நம:
ஓம் பாவனானகாய நம:
ஓம் அம்ருதாம்சவே நம:
ஓம் பாஸ்கரப்ரபாய நம:
ஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
ஓம் ஸித்தேச்வராய நம:
ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
ஓம் யோகேச்வராய நம:
ஓம் பகவதே நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் ஸத்புருஷாய நம:
ஓம் புரு÷ஷாத்தமாய நம:
ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:
ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம:
ஓம் வேங்கடேசரமணாய நம:
ஓம் அத்புதானந்தசர்யாய நம:
ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
ஓம் ஸர்வமங்களகராய நம:
ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:
மங்களம் மங்களம் மங்களம்

Thursday 2 May 2019

பாபாவும் மகான்களும்

பாபாவும் மகான்களும்...

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகத் திகழும் ஶ்ரீசாயிநாதர், அனைத்து மகான்களுமே தம்முள் இருப்பதாகவும், தாமே அனைத்து மகான்களாகவும் இருப்பதாகவும் பல நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு உணர்த்தி இருக்கிறார்.
அத்தகைய நிகழ்ச்சிகளுள் ஒரு சில நிகழ்ச்சிகளை இங்கே பார்ப்போம்...
சாயிபாபாவும் நரசிங்க மஹராஜும்...
Sai Baba Devotees
சாயிபாபாவின் சம காலத்தைச் சேர்ந்த மஹான் நரசிங்க மஹராஜ். நாசிக் என்ற இடத்தில் இருந்தவர். சகோரி என்னும் இடத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் என்பவர் இவர்கள் இருவரிடமும் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். இரண்டு மகான்களிடமும் அளவற்ற பக்தி கொண்டிருந்த ஹன்ஸ்ராஜ், ஆஸ்துமா வியாதியால் அவதிப்பட்டு வந்தார். மேலும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. நரசிங்க மஹராஜிடம் சென்ற ஹன்ஸ்ராஜ் தன்னுடைய வியாதியை குணப்படுத்தவும், தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பிரார்த்தித்தார். ஆனால், ஹன்ஸ்ராஜ் உடலில் ஓர் ஆவி புகுந்திருப்பதால், அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்று கூறிய நரசிங்க மஹராஜ், அவரை ஷீரடி பாபாவிடம் செல்லுமாறு கூறினார். அவரும் அப்படியே தன் மனைவியை அழைத்துக்கொண்டு பாபாவிடம் சென்றார். துவாராகா மாயியில் அவர்கள் பாபாவை தரிசித்து வணங்கினர். அவர்கள் தங்கள் குறைகளைக் கூறுவதற்கு முன்பே பாபா ஹன்ஸ்ராஜை அடித்து, ''தீய பிசாசே, இவருடைய உடலில் இருந்து போய்விடு' என்று கடுமையாகக் கூறினார். பாபாவின் உத்தரவு கேட்டு அந்த ஆவியும் ஹன்ஸ்ராஜ் உடலிலிருந்து ஓடிவிட்டது. பின்னர் அவருக்கு குழந்தை பிறந்ததுடன், ஆஸ்துமா நோயும் குணமானது.
மற்றுமொரு சம்பத்தையும் இங்கே குறிப்பிடலாம்.
ஹரிபாவு கார்னிக் என்ற பாபாவின் பக்தர் ஒருவர் ஒருமுறை பாபாவை தரிசிக்க வந்தார். பாபாவை தரிசித்து வணங்கினார். பின்னர் அவர் பாபாவிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். துவாரகாமாயி படிகளில் இருந்து இறங்கியபோது பாபாவுக்கு ஒரு ரூபாய் தட்சிணை கொடுக்கவேண்டும் என்று ஓர் எண்ணம் ஏற்பட்டது. பாபாவிடம் சென்று தட்சிணையைக் கொடுக்க விரும்பினார். ஆனால், உடன் வந்த ஷாமா என்பவர், பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டால், திரும்பவும் போகக்கூடாது என்று கூறினார். வேறு வழியில்லாமல், பாபாவுக்கு தட்சிணை கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் அவர் புறப்பட்டுச் சென்றார். ஊருக்குப் போகும் வழியில், நாசிக் என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்த காலாராமரின் கோயிலுக்குச் சென்றார். கோயில் வாசலிலேயே தம்முடைய சீடர்களுடன் அமர்ந்திருந்த நரசிங்க மஹராஜ், கார்னிக்கை அழைத்து, 'எனக்குத் தரவேண்டிய ஒரு ரூபாயைக் கொடு' என்று கேட்டார். கார்னிக் திகைப்பு அடைந்தாலும், மகிழ்ச்சியுடன் அவர் கேட்ட ஒரு ரூபாயைக் கொடுத்தார். அப்போதுதான் தாம் ஷீரடியில் பாபாவுக்குக் கொடுக்க விரும்பிய ஒரு ரூபாயை சாய்பாபாவே நரசிங்க மஹராஜ் மூலமாகப் பெற்றுக்கொண்டார் என்ற உண்மையை கார்னிக் உணர்ந்துகொண்டார்.
குரு கொலாப் மஹராஜ்
குரு கொலாப் மஹராஜ் என்ற ஒரு மகான் இருந்தார். அவருடைய தீவிர பக்தரான மூலே சாஸ்திரி என்பவர் ஒருமுறை தம்முடைய நண்பரான பாபு சாஹேப் பூட்டி என்பவரைப் பார்ப்பதற்காக ஷீரடிக்கு வந்தார். பூட்டியைச் சந்தித்ததும் அவர் பாபாவை தரிசிப்பதற்காக துவாரகாமாயிக்குப் புறப்பட்டார். பாபா அவர்களுக்கு பிரசாதம் கொடுத்தார். பின்னர் மூலே சாஸ்திரி பாபாவின் கைரேகையைப் பார்ப்பதற்கு அனுமதி கேட்டார். ஆனால், பாபா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவருக்கு வாழைப்பழங்கள் கொடுத்து அனுப்பிவிட்டார்.
தமது விடுதிக்குத் திரும்பிய மூலே சாஸ்திரி, குளித்து முடித்து தம்முடைய வழக்கப்படி தினசரி வழிபாடான அக்னி ஹோத்திரத்தை செய்யத் தொடங்கினார்.
பாபாவும் லெண்டித் தோட்டத்துக்குப் புறப்பட்டார். அப்போது உடன் வந்தவர்களிடம் சிறிது காவி நிறச் சாயத்தைக் கொண்டு வரும்படியும், அன்று தாம் காவி உடை உடுத்தப்போவதாகவும் தெரிவித்தார். உடன் இருந்தவர்களுக்கு பாபா சொன்னதன் பொருள் புரியவில்லை. ஆனாலும், பாபாவின் உத்தரவுக்குக் கீழ்ப்படியவேண்டும் என்பதால் அவர்கள் அப்படியே செய்தனர்.
பக்தர்களின் மத்தியான ஆரத்திக்காக பாபா தம் இருக்கையில் அமர்ந்தார். அப்போது பாபா பூட்டியைப் பார்த்து, 'உன் நண்பன் மூலே சாஸ்திரியிடம் போய் தட்சிணை வாங்கி வரும்படிக் கூறினார். பூட்டியும் மூலே சாஸ்திரியிடம் சென்று பாபா தட்சிணை கேட்பதாகக் கூறினார். மூலே சாஸ்திரிக்கு ஒன்றும் புரியவில்லை. 'தாமோ வைதீக பிராமணர். பாபாவோ ஒரு முஸ்லிம். தன் குருவும் அல்ல. அப்படி இருக்க தன்னிடம் தட்சிணை கேட்பது ஏன்? என்று நினைத்து குழம்பினார். ஆனால், பாபா ஒப்பற்ற மகான் என்பதாலும், பூட்டி தன்னுடைய நண்பர் என்பதாலும் மூலே சாஸ்திரி பாபாவுக்கு தட்சிணை கொடுப்பதற்காக, தன்னுடைய பூஜையை நிறுத்திவிட்டு துவாரகாமாயிக்குச் சென்றார். சற்று தொலைவில் இருந்தபடியே தம் கையில் இருந்த மலர்களை பாபாவின் மேல் தூவி, தம் கைகுவித்து வணங்கினார். அப்போது துவாரகாமாயியில் அவர் பாபாவைக் காணவில்லை. தம்முடைய குருநாதரான குருகொலாப் மஹராஜையே தரிசித்தார். பக்திப் பரவசத்துடன் குருவின் திருவடிகளில் விழுந்து வணங்கியவர், மறுபடியும் எழுந்து பார்த்தபோது, அங்கே குரு கொலாப் மஹராஜுக்கு பதிலாக பாபாவை தரிசித்தார். பாபாவே தம்முடைய குரு கொலாப் மஹராஜாகவும் விளங்குகிறார் என்ற பேருண்மை அவருக்கு விளங்கியது.
இதுபோல் பல மகான்களின் வடிவங்களில் பாபா காட்சி தந்திருப்பதுடன், அனைத்து மகான்களாகத் தாமே அருள்வதாகவும் பல நிகழ்ச்சிகளில் உணர்த்திக் காட்டி இருக்கிறார்.