Sunday 23 June 2019

எதிலும் நம்பிக்கையும் உறுதியும் வேண்டும்


Image may contain: 1 person

சாவித்திரிபாய் டெண்டுல்கர் என்பவர் பாபாவின் பக்தை.  "ஸ்ரீஸாயிநாத் பஜன்மேளா" என்ற 800 பாடல்களைக் கொண்ட நூலைப் பதிப்பித்திருக்கிறார்.   பாபாவின் லீலைகளை விளக்கும் அற்புதமான புத்தகம் இது.

அப்படிப்பட்ட தீவிரமான பாபா பக்தையான சாவித்திரிபாய், தன் மகனிடம், "பாபு !  உன் முகம் ஏன் வாட்டமாய் இருக்கிறது பரீட்சைக்கு படிக்கலையா?" என்று கேட்டாள். 

அதற்கு அவள் மகன் பாபுவோ,  "இல்லைம்மா !  நான் என்ன கஷ்டப்பட்டு படித்தாலும் இந்த வருஷம் பாஸ் பண்ணமாட்டேன் என்று கைரேகை நிபுணரும் நாடி ஜோசியரும் உறுதியாக சொல்கிறார்கள். அஷ்டமத்து சனி நாளிலே குரு என்று கிரகங்கள் பாதகமாக இருக்கிறதாம் !  அப்புறம் ஏன் கண்முழிச்சுப் படிக்கணும் ?" என்றான்.

அதைக் கேட்ட சாவித்திரிபாய் மகனின் நிலையை பாபாவிடம் கூறி தீர்வு பெறுவதற்காக உடனே சீரடிக்கு புறப்பட்டாள்.  மசூதியில் அமர்ந்திருந்த பாபாவிடம் சென்று,  அவரது பாதங்களை வணங்கி,  தனது மகனின் நிலைமையைக் கூறினார். 

"எதிலும் நம்பிக்கையும் உறுதியும் வேண்டும் !  உன் பிள்ளையை நன்றாகப் படிக்கச் சொல் !  நிதானமான அமைதியோடு பரிட்சை எழுதட்டும் !  கவலை என்கிறது மனதை அரிக்கும் கறையான், அதைக் கழுவிவிடு ! கைரேகைக்காரர், ஜோதிடர் உரைகளைத் தூக்கி எறி ! அவன் நிச்சயம் தேர்வில் வெற்றி பெறுவான் !"  என்று பாபா அவளிடம் உறுதியளித்து, சிறிது உதியையும் அளித்து அவளை ஆசீர்வதித்தார். 

சாவித்திரியும் மனநிறைவோடு ஷீர்டியில் இருந்து கிளம்பி ஊருக்கு திருப்பினாள்.  பாபா சொன்னதை அப்படியே தனது மகன் பாபுவிடம் சொல்லி,  பாபா கொடுத்த உதியையும் அவனுக்கு பூசிவிட்டாள்.

பாபுவும், "பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து" இரவுபகல் பாராமல் படித்து பரிட்சை எழுதி மருத்துவ தேர்வில் முதல் மாணவராக வெற்றி பெற்றான்.

பாபாவின் மீதான நம்பிக்கையும்,  பாபாவின் பரிபூரண ஆசிகளும் கிரகங்களின் கெடுதல்களையும் நீக்கிவிடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி.

No comments:

Post a Comment